Social Icons

Showing posts with label மனதில் நிறுத்தவேன்டிய துஆக்கள். Show all posts
Showing posts with label மனதில் நிறுத்தவேன்டிய துஆக்கள். Show all posts

Thursday, 22 November 2012

கலாச்சார ஊடுருவல்!

 உலகின் பல்வேறு இன, மொழி, தேசக் கலாச்சாரங்களிலிருந்தும் வேறுபட்டு அகில உலகத்தையும் தன்பால் ஈர்த்தக் கலாச்சாரம் இஸ்லாமியக் கலாச்சாரமாகும். இறை வேத வரிகளும் இறைத்தூதர் மொழிகளும் போதித்த இஸ்லாமியக் கலாச்சாரத்தை இம்மியும் பிசகாமல் இஸ்லாமியச் சமுதாயம் கடைப்பிடித்த காலமெல்லாம் அகில உலகுக்கும் முன்மாதிரியாக அது திகழ்ந்தது. இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டப் பல்வேறு சமுதாய மக்களும் இனிய இஸ்லாத்தில் இணைந்த போது, அதுநாள் வரை தாங்கள் பின்பற்றி வந்த சில கலாச்சாரங்களைத் தங்களையும் அறியாமல் சிலர் தங்களுடன் கொண்டு வந்தனர். காலப் போக்கில் அந்த அந்நியக் கலாச்சாரங்கள் வேர்விட்டு, கிளைபரப்பி, முழு இஸ்லாமியச் சமுதாயத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு இஸ்லாமிய அடிப்படைக் கலாச்சாரத்துக்குக் குழிபறித்து விட்டது எனலாம்.

Wednesday, 21 November 2012

கெட்ட கனவு கண்டால்

மனதுக்குக் கவலை தரும் கனவுகளைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பிவிட்டு

أَعُوذُ بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ
அவூது பி(B)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்

எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 6995

இஸ்லாத்தை ஏற்றவுடன் கூற வேண்டியது

اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي
அல்லாஹும்மபி(F)ர் லீ, வர்ஹம்னீ வஹ்தினீ, வர்ஸுக்னீ

இதன் பொருள் :

இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! எனக்குச் செல்வத்தை வழங்குவாயாக!

ஆதாரம்: முஸ்லிம் 4863, 4864

மணமக்களை வாழ்த்த

بَارَكَ اللَّهُ لَكَ
பா(B)ர(க்)கல்லாஹு ல(க்)க

கப்ருகளை ஸியாரத் செய்யும் போது

السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ

அஸ்ஸலாமு அலை(க்)கும் தாரகவ்மின் மூமினீன் வஇன்னா இன்ஷா அல்லாஹு பி(B)கும் லாஹி(க்)கூன்.

ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنْ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ أَوْ مِنْ عَذَابِ النَّارِ

இறந்தவருக்காகச் செய்யும் துஆ

இறந்தவரின் இல்லம் சென்றால் பின்வரும் துஆவை செய்ய வேண்டும். ................ இட்ட இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

اللَّهُمَّ اغْفِرْ لِ ---- وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيهِ

தும்மல் வந்தால்

தும்மல் வந்தால் தும்மிய பின்

الْحَمْدُ لِلَّهِ
அல்ஹம்து ல்லாஹ்

கீழே இறங்கும் போது

உயரமான இடத்திருந்து, மாடியிருந்து கீழே இறங்கும் போது

سُبْحَانَ اللَّهِ
ஸுப்(B)ஹானல்லாஹ்

அல்லாஹ் தூயவன்.

எனக் கூற வேண்டும்.



ஆதாரம்: புகாரி 2993, 2994

மேட்டில் ஏறும் போது

اللَّهُ أَكْبَر
பி(B)ஸ்மில்லாஹி அல்லாஹு அக்ப(B)ர்

இதன் பொருள் :

அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் மிகப் பெரியவன்.

என்று கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 2993, 2994

மகிழ்ச்சியான செய்தியைக் கேட்கும் போதும் மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும்

மகிழ்ச்சியான அனுபவம் நமக்குக் கிடைத்தால் அல்லது மகிழ்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டால்

اللَّهُ أَكْبَر
அல்லாஹு அக்ப(B)ர்

அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூற வேண்டும்

பிராணிகளை அறுக்கும் போது

உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுக்கும் போது

بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ
பி(B)ஸ்மில்லாஹி அல்லாஹு அக்ப(B)ர்

இதன் பொருள் :

அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ் மிகப் பெரியவன்.

என்று கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 5565, 7399

வெளியூரில் தங்கும் போது

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ  
அவூது பி(B) (க்)கமாதில்லாஹித் தம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்

இதன் பொருள் :

முழுமையான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்தின் தீங்கை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 4881, 4882

பயணத்திருந்து திரும்பும் போது

மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து

آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ
ஆயிபூ(B)ன தாயிபூ(B)ன ஆபி(B)தூன ரப்பி(B)னா ஹாமிதூன்.

இதன் பொருள் :

எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 2392

பயணத்தின் போது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை

புயல் வீசும் போது

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ(F)ஹா வகைர மா உர்ஸிலத் பி(B)ஹி. வஅவூது பி(B)(க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ(F)ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(B)ஹி

போர்கள் மற்றும் கலவரத்தின் போது

اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اللَّهُمَّ اهْزِمْ الْأَحْزَابَ اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ

அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(B), ஸரீஅல் ஹிஸாபி(B), அல்லாஹும்மஹ்ஸிமில் அஹ்ஸாப்(B), அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வஸல்ஸில்ஹும்.

Tuesday, 23 October 2012

ஹன்ளலா பின் அபீஆமிர் அல்-அவ்ஸீ

அப்துல்லாஹ் இப்னு உபை அஸ்ஸலூல் யத்ரிபில் வசித்து வந்த கஸ்ரஜ் கோத்திரத்தின் தலைவன். அவனுடைய  மக்களிடத்தில் அவனுக்கு ஏகப்பட்ட செல்வாக்கு, மதிப்பு. யத்ரிபில் இருந்த மற்றொரு முக்கியக் கோத்திரம் அவ்ஸ். இஸ்லாம் மதீனாவில் எழுச்சி பெறுமுன் அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்தினரைப் பற்றி, அவ்விரு சாராரும் ஒருவரையொருவர் குத்திக்கொண்டு, வெட்டிப் புரண்டு கொண்டிருந்தார்கள் என்று முந்தைய தோழர்கள் வரலாற்றில் அறிமுகம் செய்து கொண்டோம். 

Saturday, 20 October 2012

வீட்டில் நுழையும் போது ஓதும் துஆ

 اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ وَخَيْرَ الْمَخْرَجِ ، بِسْمِ اللهِ وَلَجْنَا ، وَبِسْمِ اللهِ خَرَجْناَ ، وَعَلىَ رَبِّناَ تَوَكَّلْناَ،
(அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரல் மௌலஜி, வகைரல் மஃக்ரஜி, பிஸ்மில்லாஹி வலஜ்னா, வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா, வஅலா ரப்பினா தவக்கல்னா.)
பொருள்:
இறைவா! (இந்த வீட்டில்) நுழைவதின் நன்மையையும் புறப்படுவதின் நன்மையையும் உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வின் பெயரால் நுழைந்தோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே புறப்படுவோம். நம்முடைய இரட்சகனின் மீது (நம்முடைய காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.
(நூல்: அபூதாவூத் 5096)

Wednesday, 3 October 2012

மனதில் நிறுத்தவேண்டிய துஆக்கள்

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்