வரதட்சணை ஓர் வன்கொடுமை
பெண் வீட்டுவிருந்து சீரழிக்கும் ஒரு சீதனம்
இன்று,
பல்வேறு வடிவங்களில் சீதனம் வரதட்சணை வாங்கப்படுகிறது. பணமாக பாத்திரமாக
லி நகையாக நிலமாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி
வைத்துள்ளார்கள்.
ஆனால், உணவாக வாங்குவது அதாவது பெண் வீட்டில் போய் விருந்து
சாப்பிடுவது, அல்லது பெண் வீட்டில் விருந்து சமைத்து அண்டா குண்டாக்களில்
வரவழைத்து மாப்பிள்ளை வீட்டில் உணவு பரிமாறுவது அல்லது திருமண வீட்டில் லி
மண்டபத்தில் நடக்கும் விருந்தில் பெண் வீட்டாரிடம் பாதிச் செலவு வாங்கிக்
கொள்வது இது போன்ற செயல்களும் வரதட்சணை தான் என்பது மார்க்கம் படித்த
பலரால் கூட உணரப்படு வதில்லை. அது ஒரு சமூகக் கொடுமையாகக் கருதப்படு
வதில்லை. அதனால்தான் இத்தீமை இன்னும் ஒழியாமல் நவீன வடிவங் களில்
தொடர்கிறது.
பெண்வீட்டு விருந்து விடயத்தில் தவ்ஹீதுவாதிகளில் பலரும் தடம் புரண்டு
விடுகின்றனர். தமக்கு வயிறு புடைக்க சாப்பாடு கிடைப்பதால் பெண் வீட்டு
விருந்துக்குப் பக்காவாக வக்காலத்து வாங்குகின்ற போரித் தவ்ஹீத்வாதிகளும்
நமக்கு மத்தியில் நிறைய இருக்கின்றார்கள்.
உண்மையில் பெண் வீட்டு விருந்து ஒரு கொடிய வரதட்சணையும் மாபெரும் சமூகக்
கொடுமையும் ஆகும். வரதட்சணைக்குரிய அனைத்து விளைவுகளும் இதற்கும்
பொருந்தும்.
கருவிலேயே இனம் கண்டு பெண் குழந்தைகளைக் கருவறுப்பது, பெண் சிசுக் கொலை,
பெண் பிள்ளையைப் பெற்றவன் வீடு வீடாகப் பிச்சை எடுப்பது, உரிய வயதில்
மணவாழ்க்கை கிடைக்காத பெண்கள் விபச்சாரத்தில் இறங்குவது, பிற மதத்தவருடன்
ஓடிப் போவது போன்ற அனைத்து தீய விளைவுகளுக்கும் இந்தப் பெண் வீட்டு
விருந்து காரணமாக அமைகிறது. அதனால், இது ஒழித்து ஓய்த்துக் கட்டப்பட
வேண்டிய மிகப் பெரிய சமூகக் கொடுமையாகும். எனினும்,மார்க்கம் படித்த மேதாவி
மதனிகள் பலருக்குக் கூட இது இன்னும் புரியவில்லை.
ஏகத்துவ எழுச்சியின் விளைவு
பெண் வீட்டிரிருந்து மாப்பிள்ளை வீட்டிற்குக் கப்பம் கட்ட முடியாமல்,
வரதட்சணை வரி செலுத்த முடியாமல் தற்கொலை செய்தவர்களை, அல்லது தற்கொலை
செய்யப் போகிறேன் என்று சொல்பவர்களைக் கண்டிருக்கிறோம். ஆனால், பெண்
வீட்டில் விருந்து வைத்தே தீருவோம், இல்லையேல் தற்கொலை செய்து கொள்வோம்
என்று மிரட்டுபவர்களை இப்போது சமுதாயம் கண்டு கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் பெண் வீட்டிரிருந்து வாரி வழித்து, சுருட்டி, சுரண்டிக்
கொண்டிருந்த வரதட்சணை என்ற பெயரில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த இளைஞர்
படை, இன்று வேண்டாம் வரதட்சணை, வேண்டாம் பெண் வீட்டு விருந்து என்று
சொல்கின்ற இந்த சகாப்தத்தைப் புரட்சி என்று தான் சொல்ல வேண்டும்.
உண்மையில் ஓர் ஏகத்துவ இளைஞன் தான் பெண் பேசிய வீட்டில் பெண் வீட்டு
விருந்து கூடாது என்று கூறியுள்ளார். அதற்குப் பெண்ணின் தந்தை விருந்து
வைத்தே தீருவேன், இல்லையேல் தற்கொலை செய்து உயிரை மாய்ப்பேன் என்று
மிரட்டியுள்ளார்.
ஏகத்துவ இளைஞன் விருந்து வேண்டாம் என்று மறுப்பது ஒரு புரட்சி! அதே சமயம்
பெண்ணின் தந்தை விருந்து வைக்கா விட்டால் செத்து விடுவேன் என்று சொல்வது
ஒரு சமூகக் கொடுமையும் சாபக் கேடு மாகும். இந்த சமூகக் கொடுமையையும் சாபக்
கேட்டையும் எதிர்த்துத் தான் தவ்ஹீத் ஜமாஅத் போர் முரசு கொட்டிக்
கொண்டிருக்கிறது.
புறக்கணிப்பு
இன்று, தவ்ஹீது வட்டத்தில் உள்ள ஒரு சிலர் நான் வேண்டாம் என்று எவ்வளவோ
சொல்ரி விட்டேன், அவர்கள் கேட்கவில்லை என்று கூறி நழுவுகின்றனர். ஆனால்,
பெண் வீட்டு விருந்தில் போய் கலந்து கொள்கின்றனர். வேறு சிலர் அந்த
விருந்தில் கலந்து கொள்வதில்லை. நாங்கள் என்ன அங்கு போய் சாப்பிடவா
செய்தோம்? என்ற மழுப்பலைப் பதிலாக்குகின்றனர். இவ்விரு சாராரும் பெண்
வீட்டுச் சாப்பாட்டை சாபக் கேட்டை சமூகச் சீர்கேட்டை வாழ வைக்கின்றனர்.
வளர விடுகின்றனர். இதற்குரிய பாவங்களைச் சம்பாதிக்கின்றனர்.
இந்த சமூகக் கொடுமையை ஒழிக்க ஒரே வழி புறக்கணிப்பது தான். புறக்கணிப்பது
என்றால் எதை? பெண் வீட்டு விருந்தை மட்டுமல்ல பெண்ணையும் சேர்த்தே
புறக்கணிப்பது தான்.
ஒரு காலத்தில் வரதட்சணை தரவில்லை என்றால் உன் பெண் வேண்டாம் என்று
சொல்வதற்குத் தெம்பும் திராணியும் கொண்டிரு ந்தார்கள். இன்று தவ்ஹீதுக்கு
வந்த பின் பெண் வீட்டு விருந்து ஒரு பித்அத், அது ஒரு சமூகக் கொடுமை என்ற
கண்ணோட்டத்தில் இந்த விருந்தை நிறுத்தவில்லை என்றால் உன் வீட்டுப் பெண்ணே
வேண்டாம் என்று கூறுவதற்குத் தெம்பும் திராணியும் அற்றவர்களாகி விட்டனர்.
அன்று ஒரு தீமைக்காக நிமிர்ந்து நின்றவர்கள் இன்று ஒரு தீமையை
ஒழிப்பதற்காக அதுவும் ஏகத்துவவாதிகளாக இருந்து கொண்டு திராணியற்றவர்களாக
ஆகி விட்டனர். சத்தியவாதிகளாக இருக்கும் போது தான் இந்தத் தெம்பு தேவை.
ஆனால், இப்போது தெம்பில்லாமல் ஒரு ஜடம் போல் காட்சியளிப்பது தான்
வேதனையாகும். இப்படிப் பெண் வேண்டாம் என்று சொல்வது எந்த அடிப்படையில்?
நன்மையிலும் இறையச்சத்திலும்
ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும் வரம்பு மீறரிலும்
ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! (அல்குர்ஆன் 05:02)
உங்களில்
ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர்
அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (சொல்ரித்
தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து
ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன
நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரரி) நூல்: முஸ்ரிம் (தமிழாக்கம் எண்:
78)
இந்த ஹதீஸின் அடிப்படையில் பெண் வீட்டு விருந்து என்ற சமூகத் தீமையைத் தடுப்பது ஈமானில் உள்ளதாகும்.
அதிலும் குறிப்பாக திருமணம் முடிக்கும் ஆண்கள் நபி (ஸல்) அவர்கள்
குறிப்பிடும் முதல் தரத்திலேயே இந்தத் தீமையைத் தடுத்து விடலாம். அதாவது
கையாலேயே தடுத்து விடலாம். கை என்பது மாப்பிள்ளையின் முழு அதிகாரத்தைக்
குறிப்பிடுகின்றது. தன் பெண்ணைக் கட்டிக் கொடுப்பதற்காக மாப்பிள்ளையின்
ஆட்காட்டி விரலின்
அசைவுகள் அத்தனைக்கும் அசையும் நிலையில் பெண்ணின் தந்தை இருக்கின்றார்.
அதனால், இந்த வாய்ப்பைக் கூடப் பயன்படுத்த முன்வராத மாப்பிள்ளை
கொள்கைவாதியல்ல! கடைந்தெடுத்த கோழை! உண்மையான தவ்ஹீத்வாதி கோழையாக
இருக்கமாட்டான்.
சப்பைக்கட்டும் சாக்குப்போக்குகளும்
பெண் வீட்டாரின் விருந்து வைக்கும் பிடிவாதம் அது சமூகத்தில் புரையோடிப்
போன தீமை என்பதையே காட்டுகிறது. சமூகத்தின் கோரப் பிடியாகவே
காட்சியளிக்கிறது. இதைத் தொடர்வதற்காகப் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை
வீட்டாரும் பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி வருகின்றனர்.
வெளியூரிரிருந்து விருந்தாளிகள் வந்து விட்டனர். அவர்களுக்கு விருந்து
கொடுக்கும் போது அக்கம்பக்கத்தவர்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் சொந்த
பந்தங்களுக்கும் அப்படியே சேர்த்து விருந்து வைக்கிறோம் என்று
சமாளி(சால்ஜா)ப்புக் கூறுகின்றனர்.
அக்கம்பக்கத்தவர் மீது தான் எத்தனை ஆதரவு? அண்டை வீட்டார் மீது தான் எத்தனை
அரவணைப்பு? உண்மையில் மெய்சிரிர்க்க வைக்கிறது. மேனி புல்லரிக்கிறது.
மருத்துவம் பொறியியல் போன்ற தொழிற்கல்விகளுக்காக சொந்த பந்தங்களில்
அக்கம் பக்கங்களில் ஒரு பத்தாயிரம் ரூபாய் உதவி கேட்டால், உதவி செய்ய
முன்வராதவர்கள் எள்ளளவுக்கும் ஈயாதவர்கள் கல்யாணப் பந்தரிலே பல
இலட்சங்களைக் கொட்டி விருந்து என்ற பெயரில் பாழாக்குவார்கள். சொந்த
பந்தங்கள் நோயில் மாட்டி விட்டால் கூட, கடனில் சிக்கி விட்டால் கூட இவர்கள்
உதவ முன்வரமாட்டார்கள். இத்தனைக்கும் இதுபோன்ற வகைகளுக்காக உதவி செய்வது
மார்க்க அடிப்படையில் கடமையாகும். ஆனால், இதைச் செய்ய மாட்டார்கள். இந்த
விருந்து வைப்பதற்காக மட்டும் சொந்தம் பந்தம் அக்கம் பக்கம் என்ற
சால்ஜாப்புகள் சமாளிப்புகள்.
இந்த சமாளிப்புகளில் ஒன்று தான் வெளியூர்க்காரர்கள் பெயரைச் சொல்ரி
இப்படி ஒரு விருந்தளிப்பதாகும். இந்த விருந்து எதை முன்னிட்டு? திருமணத்தை
முன்னிட்டுத் தான். திருமணம் இல்லாமல் இப்படி ஒரு விருந்தை வைக்க
முன்வருவார்களா? நிச்சயமாக முன்வர மாட்டார்கள்.
அன்பளிப்பின் அடிப்படை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அஸ்த்
எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (ஸகாத் வசூரிக்கும்) அதிகாரியாக
நியமித்தார்கள். அந்த அதிகாரி தமது பணியை முடித்துக் கொண்டு நபியவர்கடம்
திரும்பி வந்து அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியதுளூ இது எனக்கு
அன்பப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் உம்
தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு
அன்பப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பாரும்! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரரி) நூல்: புகாரி 6636
இந்த ஹதீஸில் அன்பளிப்பு குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
விளக்கமளிக்கின்றார்கள். இந்த அன்பளிப்பின் அடிப்படையே ஜகாத் தான். ஜகாத்
வசூலுக்குச் செல்லவில்லையானால் இவருக்கு இந்த அன்பளிப்பு கிடைத்திருக்காது.
சென்றது ஜகாத் வசூலுக்கு என்பதால் வந்த அன்பளிப்பு ஜகாத்திற்காக என்று நபி
(ஸல்) அவர்கள் தீர்ப்பளிக் கின்றார்கள்.
இது போன்று பெண் வீட்டில் நடத்தப்படும் விருந்து அந்த வீட்டில்
நடைபெறும் திருமணத்தை ஒட்டித் தான். இந்த விருந்துக்கு வெளியூர்காரர்களை
ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு நடத்துகின்றனர். வெளியூர்காரர்கள்
வந்தால் அவர்களுக்கு உணவளிப்பது எப்போதும் உள்ள ஒன்று!
திருமணத்திற்காக வெளியூர்காரர்களை அழைப்பது என்பதே மார்க்கத்தில் இல்லை.
அப்படி அழைத்து வந்தால் அந்த விருந்து அவர்களுடன் மட்டும் தான் நிற்க
வேண்டுமே தவிர அதைச் சாக்கிட்டு உள்ளுரில் ஒரு பெரிய பட்டியலாக நீளக்
கூடாது.
பொதுவாகத் திருமணம் பேசி முடிக்கும் போது பெரும்பாலும் வெளியூர்களில்
பெண், அல்லது மாப்பிள்ளை பேசி முடிப்பதில்லை. உள்ளுரிலேயே மாப்பிள்ளை லி
பெண் பார்த்து திருமணம் முடித்துக் கொள்கின்றனர். ஆனால், இன்று அல்லாஹ்வின்
அருளால் ஏகத்துவக் கொள்கைச் சகோதரர்கள் கொள்கையுள்ள பெண் வேண்டும்
என்பதற்காக வெளியூரில் பெண் பேசி முடிக்கின்றனர்.
இதுபோன்ற கட்டங்களில் சம்பந்த வழிகள் மாப்பிள்ளை வீட்டார் பெண்
வீட்டிற்கு வரும் போது விருந்தாளிகள் என்ற அடிப்படையில் பெண் வீட்டார்
அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதில் தவறில்லை. ஆனாலும் அதைக் காரணம் காட்டி
பெண் வீட்டார் தங்களது சொந்த பந்தங்களுக்கும் தெருவாசிகளுக்கும்
விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். இப்படியே பெண் வீட்டு விருந்து என்ற
சமூக நிர்ப்பந்தம் உருவாகி லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. இந்த
நிலை ஏற்பட்டுவிடக் கூடாது.
எனவே, இதைக் கவனத்தில் கொண்டு ஆண்கள் வெளியூருக்குச் சென்று மணம்
முடிக்கும் நிலை ஏற்பட்டால் அங்கு ஏற்படும் திருமணச் செலவுகள் விருந்துச்
செலவுகளை மாப்பிள்ளை வீட்டாரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மாப்பிள்ளை வீட்டார் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்
வீட்டு விருந்தை நிறுத்த வேண்டும். பெண் வீட்டாரும் இதற்கு முழு
ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
ஒரு சில இடங்களில் பெண்ணின் உறவினர்களே நிர்ப்பந்தித்து ஒரு விருந்து
வைத்தால் என்ன? என்று பெண் வீட்டாரிடம் கேட்கின்றனர். இது தான் அவர்களைக்
கடன் வாங்கி, வட்டிக்கு வாங்கி விருந்து வைக்கத் தூண்டுகிறது. அப்படிச்
செய்தால் அந்தப் பாவத்தில் இவ்வாறு தூண்டி விட்ட உறவினர்களுக்கும்
பங்குண்டு என்பதைக் கவனத்தில் கொண்டு, பாவத்திற்குத் துணை போகாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நம்மனைவரையும் நன்மையை ஏவி, தீமையைத்
தடுக்கும் நற் கூட்டத்தில் நிலைத்திருக்கச் செய்வானாக
கொடுப்பதும் எடுப்பதும் (மஹர் மற்றும் வரதட்சணை)
புகழனைத்தும்
விண்ணையும் மண்ணையும் அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் நம்மையும் படைத்த
தூயோனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே!எங்கே அமைதி?அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கும்
எண்ணற்ற அருட்கொடைகளில் மிகவும் சிறந்ததும்இ அனைவரும் விரும்புவதும்
‘அமைதி’ என்று சொன்னால் அது மிகையாகாது. காசு கொடுத்து வாங்க முடியாத
பொருள் அது.
மற்றவர்களை
விடுங்கள் அமைதி மார்க்கமாகிய இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றக்கூடிய நம்
சமுதாயத்தில் அமைதி இருக்கிறதா? இலட்சங்கள் அலட்சியமாகப் பறக்கும்
ஆடம்பரத் திருமணங்கள் மணல் வீடாகக் கலைந்து போகும் அவலம் தினந்தோறும்
நடக்கின்றன. இது ஒரு சமுதாயத்தின் அமைதியைக் குறிக்கிறதா? இல்லை!
அலங்கோலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. குடும்ப அமைப்பு
சீர்குலைந்தால் மொத்த சமுதாயமுமே சீர் குலைந்து போகும். பின் எங்கே
நிம்மதி? இந்நிலைக்குப் புற அம்சங்களைக் காரணம் காட்டாமல் நம் தாழ்வுக்கு
நாமே காரணம் என்ற பொறுப்புணர்வுடன் எங்கே தவறினோம் நாம்? என்ற சுய
அலசலிலும் இந்நிலையை எப்படி சரி செய்வது என்ற ஆரோக்கியமான அணுகுமுறையிலுமே
ஈடேற்றம் பெற முடியும்.
திருமணம்
தீனில் ஒரு பகுதி திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனில் வாழ்விலும் ஒரு
முக்கியமான அம்சம் என்பது பொது விதி. ஆனால் இஸ்லாம் ஒருபடி மேலே போய்
‘ஒருவன் திருமணம் புரிந்தால் அவன் இறைமார்க்கத்தில் ஒரு பகுதியை நிறைவேற்றி
விட்டான். எஞ்சியவற்றில் அவன் இறைவனை அஞ்சி நடந்து கொள்ளட்டும்.’ (பைஹகி)
என்று கூறுகிறது.
இன்னும்
ஒரு நபிமொழி இக்கருத்தை வலியுறுத்துகிறது. ‘திருமணம் என் வழிமுறை
(சுன்னத்). என் வழிமுறையைப் புறக்கணித்தவர் எம்மைச் சார்ந்தவர் அல்லர்.’
(இப்னு மாஜா)திருமணத்தால் அமைதி கிடைக்கிறது‘அவன் உங்களுக்காக உங்கள்
இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான். நீங்கள் அவர்களிடம் அமைதி பெற
வேண்டும் என்பதற்காக. மேலும் உங்களிடையே அன்பையும் கருணையையும்
தோற்றுவித்தான். திண்ணமாகஇ சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள்
உள்ளன’ (அல்குர்ஆன் 30:21)
இந்த
வசனத்தைப் படித்தால் மட்டும் போதாது சிந்திக்க வேண்டும்..குழந்தைகள் தான்
திருமண வாழ்வின் பரிசு. அவர்கள் பெற்றோர்களுக்குக் கண்குளிர்ச்சியாகவும்இ
பரபரப்பான வாழ்வில் அமைதி கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இறைவன்
அனுமதித்த முறையில்
இனவிருத்திக்கும்
திருமணமே சிறந்தது என்பதை கீழ்வரும் வசனம் உணர்த்துகிறது.‘மனிதர்களே!
உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்இ அவன் உங்கள் யாவரையும் ஒரே
ஆத்மாவிலிருந்து படைத்தான்இ அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்.
பின்னர் இவ்விருவரிலிருந்துஇ அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி
உலகில்) பரவச் செய்தான்.’ (அல்குர்ஆன் 4:1)
கொடுப்பது
கீழே உள்ளவைஇ நம்பிக்கையாளர்களுக்கு வெளிச்சம் தரக்கூடிய இரு ஒளிகளாகிய
குர்ஆன்இ ஹதீஸ் இவற்றில் ‘கொடுப்பது’ பற்றி உள்ள செய்திகள்இ
கட்டளைகள்.‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து
வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4)
‘நபியே!
எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய
மனைவியரை…நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்..’(அல்குர்ஆன் 33:50)‘
பெண்களை
நீங்கள் தீண்டுவதற்க்கு முன் அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம்
செய்வதற்க்கு முன் தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும்
அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடுத்து உதவு)ங்கள் – அதாவது செல்வம்
படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும் ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து
நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும்.
இது நல்லோர் மீது கடமையாகும்.’(அல்குர்ஆன் 2:236)‘..
அவர்களுக்கு
உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக்
கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக
மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக
(விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள்…’(அல்குர்ஆன்
4:24)
‘எந்த
நிபந்தனையின் வாயிலாக நீங்கள் பெண்களின் கற்புக்கு உரிமையாளர்களாய்
ஆகிறீர்களோ அதுவே மற்றெல்லா நிபந்தனைகளை விட முன்னதாக நிறைவேற்றிட உரிமை
பெற்ற நிபந்தனையாகும்.’ (நபிமொழி – புகாரி
முஸ்லிம்
எடுப்பதுகொடுப்பதைப் பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறியுள்ளவற்றைப்
பார்த்தோம். ‘எடுப்பது’ என்பதைப் பற்றிஇ அதாவது திருமணம் செய்யப் போகும்
பெண்ணிடமிருந்தோ அவளுடைய பெற்றோரிடமிருந்தோ ‘எடுப்பது’ பற்றி ஏதாவது
இருக்கிறதா என்று குர்ஆனின் 114 அத்தியாயத்திலும் தேடினாலும் ஒரு வசனம் கூட
கிடைக்கவில்லை.
நபி(ஸல்)
அவர்கள் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது தோட்டம்இ திர்ஹம்இ தங்கம் இவை
மட்டுமல்லாமல் இரும்பு மோதிரம் கேடயம் ஏன் மனப்பாடம் செய்த சூராவைக் கூட
மஹராக ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்பவங்களைப் பார்க்கிறோம். ஆனால் பெண் இத்தனை
பவுன் நகை சீர் வரிசை பலகாரங்கள் இத்தியாதிகள் இவற்றுடன் கணவன்
வீட்டுக்குச் சென்றாள் என்று எந்தக் குறிப்பும் இல்லை.‘எடுப்பது’ எப்படி
வந்தது?பெண் வீட்டாரிடமிருந்து வாங்குவது என்பது மற்ற சமுதாயத்தினரின்
செயல்.
பெண்
என்றால் சீதனத்துடன் தான் கணவன் வீட்டிற்குச் செல்ல வேண்டும்
மாப்பிள்ளைக்கு வரதட்சணை தர வேண்டும் என்பதெல்லாம் ‘அவர்கள்’
சம்பிரதாயங்கள். இறைவேதத்தையும் நபிவழியையும் முதுகுக்குப் பின்னால்
தூக்கிப் போட்டு விட்டு ‘அவர்களை’ப் பின்பற்ற ஆரம்பித்து விட்டோம் நாம்.ஒரு
பேச்சாளர் ‘இப்போது நடக்கும் திருமணங்கள் வியாபாரம் போல் ஆகிவிட்டன.’
என்று குறிப்பிட்டார்.
இது
என்னைச் சிந்திக்க வைத்தது – வியாபாரம் என்றால் பணத்தைக் கொடுத்து ஒரு
பொருளை வாங்குவது அல்லது பொருளை விற்று பணத்தைப் பெறுவது. சரி நம் கையை
விட்டுப் பணம் போகும் போது பொருள் நம் கைக்கு வர வேண்டும் – அது தான்
வியாபாரம். ஆனால் திருமணத்தில் பணம் நம் கையை விட்டுப் போகிறது பெண்ணும்
போகிறாள் ஆனால் நம் கைக்கு எதுவும் வருவதில்லை. இது எந்த வியாபார
விதிக்கும் உட்பட்டதாக இல்லையே.. மோசடி வியாபாரமாக அல்லவா இருக்கிறது!
சந்தையில்
மாடு விற்பவன் கூட மாட்டைக் கொடுத்து விட்டுப் பணத்தை எண்ணி வாங்கிக்
கொள்கிறான். ஆனால் பெண்ணைப் பெற்றவனோ பெண்ணையும் கொடுத்து பொன்னையும்
கொடுத்து சீர் என்ற பெயரில் புழங்குவதற்கு சாமான்களையும் கொடுத்து பிறகு
பணத்தையும் கொடுக்கிறான்..
நம்
பெண்கள் மாட்டைவிடவா கேவலமாகி விட்டார்கள்?இதை பெண்களும் யோசிக்க வேண்டிய
விஷயம்.. பொன்னோடும் பொருளோடும் மாமியார் வீட்டுக்குப் போவது தான் பெருமை
என்ற எண்ணத்தை பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனோ தெரியவில்லை நம்
சகோதரர்களுக்கு இஸ்லாமிய சிந்தனை திருமணமான பிறகு தான் வருகிறது.
வாங்கிய
வரதட்சணையைத் திருப்பிக் கொடுக்கிறோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால்
இந்த விழிப்புணர்வு திருமணத்திற்கு முன்பே வந்திருந்தால் வரதட்சணை கொடுக்க
வசதியற்ற பெண்ணுக்கு வாழ்வு கிடைத்திருக்கும்.மறைமுகமாக எடுப்பது வரதட்சணை
என்று ரொக்கமாக வாங்காவிட்டால் தாங்கள் நபிவழியில் திருமணம் புரிந்ததாக
சிலர் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
மார்க்கத்தில்
இல்லாத நூதன விழாக்களால் பெண் வீட்டிற்கு எத்தனை வீண் செலவுகள்! பெண்
பார்த்தல்இ நிச்சயதார்த்தம் மருதாணி விழா ஆடம்பரமான மண்டபம் அல்லது ஐந்து
நட்சத்திர ஹோட்டலில் நிக்காஹ் விருந்து மறு வீடு என்று விருந்துக்கு மேல்
விருந்தாகவும் பலகார வகைகள் சீர் என்று வித விதமான செலவினங்கள். கட்டில்
பீரோ ஏசி ஃபிரிஜ் என்பதெல்லாம் காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
எல்லாவற்றிற்கும் மேலாக தங்கம் விற்கும் விலையில் படித்த மாப்பிள்ளை
என்றால் குறைந்த பட்சம் ஐம்பது பவுன் என்பது எழுதாத சட்டமாகி விட்டது.
இத்தனையையும்
கேட்டு வாங்கினால் தானே தவறு? கேட்காமலேயே வரக்கூடிய இடமாகப் போய் பெண்
எடுத்தால் வம்பில்லையே.. ‘வீண் செலவு செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்கள்’
(அல்குர்ஆன் 17:27) என்ற திருவசனம் இவர்களின் மனதில் பதியவில்லையா? அல்லது
‘வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.’ (அல்குர்ஆன் 7:21) என்ற
வசனத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார்களா? அல்லது ‘குறைந்த செலவில்
குறைந்த சிரமத்துடன் செய்யப்படும் திருமண நிகழ்ச்சியே சிறந்ததாகும்.’ என்ற
நபிமொழியைக் காலத்துக்கு ஒவ்வாதது என்று ஒதுக்கி விட்டார்களா?!!
விளைவுகள்
இன்றைய திருமணங்கள் இறையச்சத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. எப்படி என்று
கேட்கிறீர்களா? அல்லாஹ் திருமறையில் வட்டியைப் பற்றி ‘யார் வட்டி வாங்கித்
தின்கிறார்களோ அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்டவனாக எழுவது
போலல்லாமல் (வேறு விதமாக) எழ மாட்டான். இதற்குக் காரணம் அவர்கள் ‘நிச்சயமாக
வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம்.
அல்லாஹ்
வியாபாரத்தை ஹலாலாக்கி வட்டியை ஹராமாக்கி இருக்கிறான்…’ (அல்குர்ஆன்
2:275) என்றும் ‘ஈமான் கொண்டோரே இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில்
வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி
(இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.’(அல்குர்ஆன் 3:130)
என்றும் கூறி நம்மைக் கடுமையாக எச்சரித்திருக்கிறான்.இருந்தாலும்இ பலர் ஒரு
பெண் குழந்தை பிறந்தவுடன் எல்.ஐ.சி.இன் திருமகள் திருமணத் திட்டம் என்று
வட்டி அடிப்படையில் இயங்கும் வங்கிகளில் சேமிக்கத் தொடங்கி விடுகின்றனர்.
காரணம் அப்படி சேர்க்கும் தொகை அவள் திருமண வயதில் வட்டியோடு குட்டி போட்டு
பெருந்தொகையாக இருக்கும். இப்படி ஹராமாக சேர்த்த பணத்தையோ அல்லது
வட்டிக்கு கடன்பட்டோ தான் கைக்கூலியாகவும் நகையாகவும்இ சீராகவும்
கொடுக்கிறார்கள்.
நினைத்துப்
பார்த்தால் அருவருப்பாக இல்லை? ஒருவன் ஹராமான வழியில் பொருளீட்ட
காரணமாயிருப்பது யார் என்று யோசித்துப் பாருங்கள். மறுமையில் அல்லாஹ்வின்
தண்டனையை அஞ்சிக் கொள்ளுங்கள்.ஹஜ் செய்வது இஸ்லாத்தில் கட்டாயக்கடமை.
அதாவது பொருள் வசதியும்இ உடல்வலிமையும் உள்ளவர்கள் செய்ய வேண்டிய கடமை.
ஆனால்இ உடலில் வலு இருந்தும்; கையில் வழிச்செலவுக்குப் போதுமான பணம்
இருந்தும் புனித பயணத்தைத் தள்ளிப் போட அவர்கள் காரணம் காட்டுவது
திருமணத்திற்குப் பெண் இருக்கிறாள். அவளுடைய திருமணக் கடமையை முடித்த
பின்பே ஹஜ் செய்ய வேண்டும் என்பதை மார்க்கச் சட்டமாக ஆக்கி விட்டார்கள்.
மரணம் முந்திக் கொண்டால் ஹஜ் செய்ய முடியாமலே ஆகிவிடும். இதற்கு யார்
காரணம் என்பதை சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.
ஏழ்மை
அல்லது கொள்கைப் பிடிப்பின் காரணமாகவோ வரதட்சணை கொடுக்க முடியாத வீட்டுப்
பெண்களில் சிலர் மாற்று மதத்தவர்களைக் கூட மணந்து வாழ்கிறார்கள். ‘இணை
வைக்கும் ஒருவனை மணத்தல் கூடாது’ என்பது இறை கட்டளை. அதை மீற காரணம்
யார்?அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கமான இஸ்லாத்தில் பிறந்துள்ள
நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்! ஆனால்இ துரதிரூஷ்டவசமாக நாம்
அனாச்சாரங்களால் அதை எவ்வளவு தூரம் கறைபடுத்த முடியுமோ அவ்வளவு தூரம்
கறைபடுத்திக் கொண்டிருக்கிறோமே இது நியாயமா?
அண்ணல்
நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தந்துள்ள இஸ்லாமியத் திருமணம் வீண்
சம்பிரதாயங்கள் எதுவும் இல்லாத எளியஇ அழகிய வாழ்க்கை ஒப்பந்தம்.
பிறப்பிலிருந்து இறப்பு வரை குர்ஆனும் நபிவழியும் சொல்கிறபடி வாழக்
கடமைப்பட்டவர்கள் நாம். மாற்றுமதத்தினரின் வீண் சம்பிரதாயங்களை பின்பற்ற
ஆரம்பித்ததனால் நம் சமுதாயத்தில் எத்தனைக் குழப்பங்கள்!
பெண்
தேடும் போது தன்னை விட உயரமான பெண்ணை மணக்க ஒரு ஆண் விரும்புவதில்லை.
தன்னை விட உயரம் குறைந்த பெண்ணையே மணக்க விரும்புகிறான்.
மனோதத்துவரீதியாகப் பார்த்தால்இ இதற்குக் காரணம் தன் மனைவியை விட தான்
உயர்ந்திருக்க வேண்டும் அவள் அன்னாந்து பார்க்கும் விதத்தில் இருக்க
வேண்டும் என்ற எண்ணம்தான். உடலளவில் மட்டும் உயர்ந்திருந்தால் போதுமா?
உள்ளத்தால் உயருதல் தான் மனிதனுக்கு அழகு. ஒரு பெண்ணும் தன் கணவன் அப்படி
உள்ளத்தால் உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவாள்.
அப்படிப்பட்டவனையே மதிப்பாள்.
இஸ்லாம்
காட்டும் வழிபடி மஹர் கொடுத்து மணம் முடித்து உங்களால் இயன்ற அளவு வலிமா
விருந்து கொடுத்து உயர்ந்து காட்டுங்கள். உங்கள் இல்லத்திற்குத் தேவையானதை
உங்கள் உழைப்பில் வாங்குவது தான் பெருமை.இன்று எந்த லாபமும் கருதாமல் ஒரு
பெண்ணை மணந்தால் அடுத்த தலைமுறையும் திருந்தும். இந்தப் ஈனப் பழக்கம்
வேரோடு அழிந்து விடும். நம் உடலை விட்டு உயிர் பிரிந்த வினாடியே நாம்
சொந்தம் என்று சொல்லிக் கொள்ளும் எதுவும் நமக்கு சொந்தம் இல்லாமல்
போய்விடும். கபன் துணியைத் தவிர நம்முடைய எந்தப் பொருளும் நம்முடன்
வரப்போவதில்லை என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ‘எடுப்பது’
என்பது மாற்றார் வழி.. ‘கொடுப்பது’ மட்டுமே நம் வழி!-
No comments:
Post a Comment